Tuesday, December 15, 2009

இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும் மன்​மோ​கன் சிங் அரசு

அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​

அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!

1.லாபம் எல்லாம் அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு, ஆனால் அணு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல், அது இந்திய அரசாங்கத்தின், அதாவது இந்திய மக்களின் வரிப்பணம் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். போபால் விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா? இன்னும் வழக்கு நியூ யார்க் நகரில் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த நாட்டு சட்டம் எல்லாம் அவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. சரி அதை விடுங்கள். ஒரு பழைய கப்பல், அதை எல்லா நாடுகளும் எங்களுக்கு வேண்டாம், அதனால் சுற்று சூழல் பதிப்பு மற்றும் அதனை உடைக்கும் தொழிலாளர்கள் நலன் பாதிக்கும் என்று நிராகரித்த பின், இந்திய அரசியல்வாதிகள் பணம் வாங்கிக்கொண்டு அனுமதிதி விட்டார்கள். அது மட்டுமா, மேற்கத்திய நாடுகள் நிராகரித்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி (ஆந்திர விவசாயிகள் தற்கொலை நினைவிருக்கிறதா), அரிசி மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றைத் தீமை வரும் என்று தெரிந்தே லஞ்சம் வாங்கிகொண்டு அனுமதிக்கிற இந்திய அரசியல்வாதிகள்

2,பல ஆயிரம் கோடிகள் கொள்ளை லாபம் அடிக்கும் இந்திய IT நிறுவங்களுக்கு, அதில் வேலை செய்யும் ஊழியர்களின் நலனைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தொழிலாளர் சட்டத்திலிருந்து விலக்கு அளித்திருகிறது! இதன் மூலம் IT நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். ஊழியர்களின் நலனைப் பற்றி கவலைப் பட தேவையில்லை. இப்போது மக்களின் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பன்னாட்டு நிறுவங்களின் உத்தரவுக்கு அடிபணிந்திருப்பது மிக்க அதிர்ச்சி தருகிறது

3.கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் எது நடந்தாலும் சிறிதும் கவலைப்படாத மக்கட்கூட்டம் மலிந்துவிட்டது. சுய நலம், தான் வாழ்ந்தால் போதும், என்ற மனப்பாங்கு, இவை நாட்டையே அழிக்கவல்ல சக்தி என்பதை உணரவில்லை

4.அணு மின்சாரம் தயாரிக்கும் அமெரிக்க கம்பனியின் கூட்டாளியான இந்திய கம்பனி (பெரிய மூலதனம் தேவைப்படுவதால், ஒரு அம்பானியோ, தயாநிதியோ, அ. ராசாவோ, கனிமொழியோ இந்திய கூட்டளியாகலாம்) ) தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்! இது எப்படி? தொழில்நுட்பம் அமெரிக்க கம்பனியுடையது, நஷ்ட ஈடு கொடுப்பது இந்திய கம்பனி!. இது போல் ஒரு சட்டம் எந்த அமெரிக்க மாகாணத்திலும் இல்லை. அமெரிக்க உயிருக்கு விலை மதிப்பு அதிகம். இந்திய உயிர் கேவலமானது.

readers please think.

thanks to dinamani and wellwishers.

Tuesday, October 20, 2009

இந்தியா- உலக நாடுகளின் குப்பை தொட்டியா?- 2

உலகமயம் என்கிற போர்வையில் இந்தியாவும் ஏனைய வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவைக்கும் வசதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறுபவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். மேலோட்டமாக வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, தேசத்தின் அடிப்படை ஸ்திரத்தன்மை தகர்க்கப்பட்டு வருகிறது.

உலகமயம் என்கிற பெயரில் அவர்களது பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியா பயன்படுத்தப்பட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை அசுத்தப்படுத்தும் கழிவுப் பொருள்களையும், அந்த நாட்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள்களையும், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களையும் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக நாம் மாற்றப்படுவதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?

அதைவிட துர்பாக்கியமான நிலைமை என்ன தெரியுமா? நமது அரசும் ஆட்சியாளர்களும் இது தெரிந்தும் தெரியாததுபோல இருப்பதும், மறைமுகமாக இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான். ஏன் நீதிமன்றங்களேகூட இந்தச் சம்பவங்களை சட்டத்தின் போர்வையில் ஆதரிக்கத் தலைப்படுகின்றன என்பதுதான் அதைவிட வேதனைதரும் விஷயம்.

ஓராண்டுக்கு முன்னால் எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல் "ப்ளுலேடி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு கடல் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாசும், பாலி க்ளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக்கொண்ட அந்தக் கப்பலை உடைக்க சின்னஞ்சிறு வங்கதேசமும், மலேசியாவும் கூட மறுத்துவிட்ட நிலையில் "ப்ளுலேடி' இந்தியாவைத் தஞ்சமடைந்தது.

என்னவாயிற்று தெரியுமா? நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் அந்தக் கப்பல் உடைத்துப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அந்தக் கப்பல் உரிமையாளர்களின் கோரிக்கை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டில் பன்னாட்டுப் புகையிலை நிறுவனமான ஐடிசி நிறுவனத்தாரின் காகித தொழிற்சாலைப் பிரிவினர் 25,000 டன் பழைய பேப்பர் இறக்குமதி செய்வதாகக் கூறி நியூஜெர்ஸி நகரத்தின் குப்பைக் கூளங்களையும் சில கன்டெய்னர்களில் நிரப்பி அந்தக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபோல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்னென்ன நச்சுப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும், ரகசியமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?.

இப்போது மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய கப்பல் குஜராத் செüராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. "எஸ்.எஸ். இண்டிபென்டன்ஸ்' என்கிற அந்தக் கப்பல் எம்.எஸ். ஓஷியானிக் என்று முதலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது "பிளாட்டினம் 2' என்கிற பெயருடன் இந்தியத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இந்த அமெரிக்கக் கப்பல் இந்தியாவைத் தஞ்சம் அடைவானேன்?.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாய் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏன் அமெரிக்காவிலேயே உடைத்து பிரிக்கக் கூடாது? நியாயமாகப் பார்த்தால் அமெரிக்கக் கப்பலான "பிளாட்டினம் 2' அமெரிக்காவில் பிரிக்கப்படுவதுதானே நியாயம்?

அமெரிக்கச் சுற்றுச்சூழல் சட்டப்படி சுமார் 200 டன்களுக்கும் அதிகமான "ஆஸ்பெஸ்டாஸ்' அடங்கிய பொருள்களும் சுமார் 210 டன்கள் பாலி குளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சு ரசாயனம் கலந்த பொருள்களும் இருக்கும் இந்தக் கப்பல் அமெரிக்காவில் உடைக்கப்பட முடியாது. இதை உடைப்பதால் அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கச் சட்டங்கள் அனுமதி மறுக்கின்றன.

இந்தியாவை இந்தக் கப்பல் எப்படி அடைந்தது என்று கேட்டால் அதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைக்கிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி செüராஷ்டிரா கடற்கரையை ஒட்டிய ஆழ்கடலை அடைந்த இந்தக் கப்பல் பவநகரிலுள்ள "அலங்க்' கப்பல் உடைப்புத் தளத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல், ஒரு விசைத்தோணி மூலம் இழுத்து வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் அந்த விசைத்தோணி இன்னொரு கப்பலில் மோதிவிட அங்கேயே அந்தக் கப்பல் கைகழுவப்பட்டது.

இந்தக் கப்பலை யாருக்கும் தெரியாமல் "அலங்க்' கப்பல் உடைக்கும் தளத்துக்குக் கொண்டு வர எத்தனித்த தனியார் நிறுவனம் கைகழுவி விட்டதால் கடலில் நங்கூரமிட்டது இந்தக் கப்பல். விவரமறிந்த குஜராத் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கப்பலைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தத் தனியார் நிறுவனமே கூடத் திட்டமிட்டு இந்தக் கப்பலை நடுக்கடலிலிருந்து விசைத்தோணி மூலம் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துக் கொண்டுவந்து கைவிட்டதோ என்னவோ? கப்பல் உரிமையாளரிடம் அதற்குப் பெரிய தொகை பெற்றிருக்கலாம். இந்திய எல்லைக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கப்பலை நாம் நடுக்கடலில் கொண்டு விட முடியாது. உடைத்துத்தானே தீரவேண்டும்?

இதைப்பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை. இதுபோன்ற நச்சுக்கழிவுகளும், கதிரியக்கத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களையும் கொண்ட ஒரு கப்பலை யார், எப்படி, எதற்காக இந்திய எல்லையில் நங்கூரம் பாய்ச்ச அனுமதித்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப் போவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர்.

இதுபோன்ற கப்பல்கள் உள்ளே வருவதை கண்காணிப்பதுதானே கடலோரப் பாதுகாப்பு படையினரின் வேலை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, படுகிறதா? மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களையே கண்காணிக்காமல் விட்டவர்கள்தானே அவர்கள்? அதற்குப் பிறகாவது உஷாராக இருந்திருக்கவேண்டாமா?

உலகமயம் என்கிற பெயரில் உலகின் நச்சுப் பொருள்களும், கதிரியக்கப் பொருள்களும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு நமது தாய்த்திருநாடு பயன்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களை இது சற்றும் பாதித்ததாகவே தெரியவில்லை! இந்த லட்சணத்தில் நாம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வேறு செய்துகொண்டிருக்கிறோம். மிக அதிகமான கதிரியக்கம் உள்ள அணுக்கழிவுகள் இந்தியாவில் கொட்டப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்?
thanks to dinamani

Friday, October 16, 2009

இளிச்சவாயன் இந்தியன் ?-- FOLLOWUP

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு மத்திய அரசின் மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுமம் (GEAC) அனுமதி அளித்துவிட்டது என்றும், இது குறித்து அரசு இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அங்கீகாரக் குழுமம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், தற்போது அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டம், வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டம் என்பதும் சொல்லப்படாத உண்மை. இந்த அறிவிப்பை மத்திய அரசு ஏப்ரல் மாதமே அறிவிப்பு செய்திருக்கும். ஆனால், கிரீன்பீஸ் அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த களஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன. அதில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசத் தொடங்கின. அதனால் அரசு இத்தனை மாதங்களாக இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்து வந்தது.

மைக்கோ சமர்ப்பித்த ஆய்வுக்கூட அறிக்கைகள் முறையாகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதும், பல முடிவுகள் சாதகமாக காட்டப்பட்டுள்ளன, அறிவியல்பூர்வமானவை அல்ல என்பதும் கிரீன்பீஸ் அமைப்புகளின் வாதங்கள். அவற்றில் அவர்கள் குறை சொல்லும் முக்கியமான மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:

அ) மரபீனி மாறுதல் புகுத்தப்பட்ட இந்தக் கத்தரிக்காய், அதன் புரதத்தில் எத்தகைய மாற்றத்தைப் பெறுகிறது என்பதற்கும், இந்தப் புரதம் மனிதருக்குத் தீமையாக அமையாது; நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

ஆ) மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயை உண்போருக்கு இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

இ) இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபீனி கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.

கிரீன்பீஸ் அமைப்பினர் சுட்டிக்காட்டிய இந்தக் குறைபாடுகள் குறித்து மறுஆய்வுகள் செய்யப்பட்டனவா இல்லையா என்ற எந்தத் தகவலும் இல்லாமல், மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறியிருக்கிறார். அங்கீகாரக் குழுவின் பரிந்துரையை ஏற்று அனுமதிப்பதைத் தவிர அரசு செய்யப்போவது ஏதுமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

உலக நாடுகளில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மொத்தம் 4.72 லட்சம் ஹெக்டேரில் 76 லட்சம் டன் கத்தரிக்காய் விளைகிறது. பூச்சிகள் பாதிப்பால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயால் இந்திய மக்களுக்கும் இந்திய வணிகத்துக்கும் எந்த வகையிலும் லாபம் இல்லை.

அமெரிக்கா மட்டுமே மரபீனி மாற்றுப் பயிர் நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உலக வர்த்தக நிறுவனத்தின் (ரபஞ) சட்ட திட்டத்துக்கு எதிரானது. இருந்தாலும்கூட, தைரியமாகத் தடை விதித்துள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று மான்சான்டோ, மைக்கோ உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் 56 உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்றுப் பயிர் களஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், தக்காளி, உருளை ஆகியனவும் உள்ளன. இதில் முதல் வர்த்தக உற்பத்தி அனுமதியைப் பெறுவது மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்.

இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அவற்றின் மீது லேபிள் ஒட்டப்படுமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு விளக்கம் சொல்லவில்லை. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி அதிகம்; விலை மலிவு என்ற காரணத்தால் நாட்டுக் கத்தரிக்காயுடன் கலந்து விற்கப்படும் ஆபத்து நிறையவே இருக்கிறது.

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு "ராயல்டி' செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்கிற கதையாகிவிட்டது இந்தியாவின் நிலைமை. திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க முனைந்து செயல்படுகிறார்கள்.

மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே எதிர்க்கும் போது , இந்தியாவில் அதற்க்கு வரவேற்ப்பு எதற்கு . அதற்கு எத்தனை கோடிகள் கை மாறப்போகிறது . யாரும் , மக்களயோ, விவசாயிகளையோ பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை . மரபணு மாற்றப்பட்ட பருத்தி விவசாயம் செய்த ஆந்திராவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் . சீனாவில் எத்தனை விவசாய நிலங்கள் வீணாப்போனது .


ஒவ்வொரு தேசத்தின் தலைஎழுத்தும் ஆட்சியாளர்களால் தான் எழுதப்படுகிறது. ஒரு குடும்பத்தலைவன் சரியில்லை எனில் அந்த குடும்பம் மீண்டும் தலை எடுக்க குறைந்த பட்சம் இரண்டு தலைமுறை பிடிக்கும். ஒரு ஆட்சி தவறாகி, தொலை நோக்கு இல்லாது செயல்பட்டு முட்டாள் தனமாக ஆண்டால் அந்த தேசம் உருப்படியாக பல தலைமுறையாகும். அதற்கு மிக சிறந்த உதாரணம் இந்தியா. ஒரு ஆட்சியாளன் மட்டுமல்ல. எல்லா ஆட்சியாளனுமே நிர்வாகத்திறன் அற்று செயல்பட்டதால் இந்தியா பாதிப்படையாத விஷயம் இல்லை. இதன் எதிரொலி போக போக தெரியும். ஒருவன் எதற்கு வேண்டுமானாலும் கையேந்தலாம். ஆனால் சோற்றுக்காக மட்டும் கை ஏந்தக்கூடாது. ஒரு தேசத்தையே இவர்கள் கையேந்த வைக்க போகிறார்கள். 2020ல் வல்லரசு என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள.

THANKS TO DINAMANI, CHERACHOLAPANDIYAN, VISAKA

Wednesday, September 16, 2009

வீணாகும் மக்கள் வரிப்பணம்

பருவமழை தவறியதால் நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் தங்களது பங்களிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தங்களது துறையைச் சார்ந்த அலுவலர்களும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக நிதியமைச்சர் இனி தனது விமானப் பயணங்களில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து சாதாரண வகுப்பில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்தார். சொன்னதுடன் இல்லாமல் செயலிலும் இறங்கி கோல்கத்தாவுக்கும், நேற்று சென்னைக்கும்கூட சாதாரண வகுப்பில் பயணித்து அரசுக்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தனது பங்குக்கு சாதாரண வகுப்பில் பயணித்தார் என்பதுடன், அவரைப் பின்பற்றி ஏனைய மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சாதாரண வகுப்பில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

சாதாரண வகுப்பில் பயணிப்பதால் அரசுக்கு அப்படி என்னதான் மிச்சம் ஏற்பட்டுவிடும் என்று கேட்டுவிடக் கூடாது. நமது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 75 சதவீதம் அவர்களது சுற்றுப்பயணச் செலவுக்காகத்தான் என்பது தெரியுமா?

விமானக் கட்டணம், அன்னியச் செலாவணி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம், வெளிநாடு செல்லும்போது இவர்கள் அழைத்துச் செல்லும் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான செலவு என்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரிப்பணம் நமது அமைச்சர்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவாகிறது (வீணாகிறது!) என்பதுதான் உண்மை.



2007 - 2008-க்கான புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான மொத்தச் செலவு ரூ. 182 கோடி. இதில் இவர்களது உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 138 கோடி. மொத்த அமைச்சரவையின் சம்பளம் மற்றும் படிகள் வெறும் ரூ. 1.75 கோடிதான். இவர்களது வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவு, அலுவலகத் தனி உதவியாளர்கள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு, வாகனச் செலவுகள் என்பன மீதியுள்ள செலவுகள்.

நமது மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களது சுற்றுப்பயணச் செலவுகளில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதன் மூலமும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து, அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஆளுநர் மாளிகைகளில் தங்குவதன் மூலம் 10 சதவீதம் மிச்சம் பிடித்தால், ஆண்டொன்றுக்கு ரூ. 18 கோடி மிச்சமாகுமே என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு.

ஆண்டொன்றுக்கு இந்திய அரசின் மொத்தச் செலவு, 2009-10-க்கான நிதிநிலை அறிக்கையின்படி ரூ. 10,20,838 கோடி. இதில் ரூ. 18 கோடி எத்தனை சதவீதம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமைச்சர்களின் செலவுகளால் ஆகும் வரிப்பண இழப்பைவிட, நமது உயர் அதிகாரிகளின் பயணச் செலவுகளால் ஆகும் இழப்புகள் பல நூறு மடங்கு அதிகம் என்பது நமது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன?

மைத்துனிக்குக் குழந்தை பிறந்தால், தில்லியிலிருந்து பெங்களூருக்கும், மைத்துனனுக்கு நிச்சயதார்த்தம் என்றால் தில்லியிலிருந்து புவனேஸ்வரத்துக்கும் ஏதாவது அலுவலக வேலையை உருவாக்கிக் கொண்டு அரசு செலவில் பறப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்வதை நமது உயர் அதிகாரிகள் தவிர்த்தாலே ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மிச்சமாகுமே! அரசின் பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் ஏற்படும் காலதாமதத்தால் ஆண்டுதோறும் வீணாகும் வரிப்பணம் ரூ. 1,000 கோடியைத் தாண்டுமே, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே, ஏன்?

இந்தியாவில் ஓடும் மோட்டார் வாகனங்களில் 60 சதவீதம் அரசு வாகனங்கள்தான். இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி? அதனால் வீணாக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சம் பிடிக்கப்பட்டாலே கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகுமே, அது ஏன் கவனிக்கப்படுவதில்லை?

பொருளாதாரத் தேக்கத்தால் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறையும் வாய்ப்பு நிறையவே உண்டு. வறட்சியின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற இனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வரும் மத்திய அரசு, மேலும் தள்ளாடும் என்பது நிஜம்.

இந்த நிலையில், நிர்வாக இயந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலமும், திட்டமல்லாச் செலவை, அதாவது வட்டித்தொகை, பயணச் செலவு, அரசு விழாக்கள், திடீர் இலவச அறிவிப்புகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிதிநிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பறப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் இருக்கட்டும். கட்டுக்கடங்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் சர்வ வியாபியாகிய அதிகார வர்க்கத்துக்குக் கடிவாளம் போடுவது யார்?
எப்படி? எப்போது?

தேங்க்ஸ் டு dinamani

Friday, September 11, 2009

விரியும் விற்பனை வாய்ப்பு

தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை எப்போதையும்விட இப்போது மேலதிகமாக இருக்கிறது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரத்துக்கு மாறி, இரு தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில், பாரம்பரிய அறிவை மீட்டெடுக்கவும் அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் இருக்கிறது.

ரசாயன உரத்துக்காக மத்திய அரசு சில ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் ஆலைகளுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறதே தவிர, விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

இயற்கை வேளாண்மையில் அவரவர் பகுதியில் கிடைக்கும் மக்கும் பொருள்கள், தழை உரங்கள், பச்சிலை பூச்சிவிரட்டிகள், மண்புழு உரம் என்று தங்கள் சுற்றுவட்டாரத்தில் கிடைப்பதையே பயன்படுத்துகிறார்கள். சுற்றுச்சூழல் கெடுவதில்லை. உரத்தை இவர்கள் பயன்படுத்துவதே இல்லை என்பதால், இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து மானியம் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளலாம்


.வேளாண்மை மன்றத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே விவசாயம் தொடர்பான ஆலோசனைகளைத் தரலாம்; மீறினால் தண்டனை என்று சட்டம் சொல்லுமேயானால், அந்தச் சட்டம் ஏதோ ஓர் அறிவை வளரக் கூடாது என்று தடுக்கிறது என்றுதான் பொருள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சக மாணவர்களுடன்கூட தாய்மொழியில் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்; மீறினால் அபராதம் என்று சொல்வது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமோ அதேபோன்றதுதான் இச்சட்டமும். நல்லவேளையாக, தமிழக அரசு இதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது

.உலகம் முழுவதும் ஆரோக்கிய உணவு முறைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கிய உணவு என்பது ரசாயன நஞ்சு கலவாத உணவு. "ஆர்கானிக் புராடக்ட்' "ஆர்கானிக் புட்' ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் 3 லட்சம் கோடி யூரோஸ் அளவுக்கு விற்பனையாகிறது. ஆண்டுதோறும் இந்த நுகர்வோர் சந்தை 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2010 ஜூலை 1-ம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும், இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள் அல்லது உணவு என்பதைக் குறிக்கும் இலச்சினை (லோகோ) அதன் மீது ஒட்டப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளனர். இதற்கான இலச்சினை போட்டி (முதல் பரிசு ரூ. 6000 யூரோஸ்) அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறாக விரியும் விற்பனை வாய்ப்பு கைநழுவக் கூடாது என விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் இயற்கை வேளாண்மையில் பொருள்களை விளைவித்து உலகச் சந்தையில் விற்று அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கின்றன.

இதைச் செய்து முடிக்கவும், இயற்கை வேளாண்மையைக் கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.ஒருவேளை, தமிழக அரசின் இந்தச் சட்டமே, அதாவது மன்றத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே என்ற நிபந்தனை, இந்த கண்காணி வேலையில் தற்போது இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் முக்கிய நபர்கள் நுழைந்துவிடாமல் ஒரு சிலர் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்வதற்குத்தானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.இந்நிலையில், தமிழக அரசு நமது விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை அறிவைக் கொண்டு சேர்த்து, மிகச் சிறிய அளவிலாகிலும் இயற்கை வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை அரசே உருவாக்கித் தந்தால் என்ன!



இயற்கை வேளாண்மை உணவுப் பொருள் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள், சந்தை வாய்ப்பு அறிமுகப்படுத்துதல் போன்ற உதவிகளை வழங்க அரசால் முடியும்.உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைத்த தமிழக அரசு, "உழவர் ஏற்றுமதி சந்தை'யையும் அமைத்தால் என்ன?

விவசாயிகளும்தான் கொஞ்சம் பணத்தைக் கண்ணால் பார்க்கட்டுமே!

தேங்க்ஸ் டு தினமணி

Thursday, September 10, 2009

எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் (ஈ.ஸி.) மாத்திரைகள்

ஒரு தெலுங்குப் பத்திரிகையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு சிறிய தகவலைச் சொல்லிவிட்டு, விவரத்தைச் சொன்னால்தான், இங்கு சொல்லப்போகும் விஷயத்தின் தீவிரம் புரியும்: "ஹைதராபாதில் எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் (ஈ.ஸி.) மாத்திரைகள் விற்பனை ஒரு மாதத்திற்கு 40,000-க்கும் அதிகம். தில்லி, சென்னை, மும்பை பெருநகர்களில் இது மேலும் அதிக அளவில் இருக்கும்'.அதற்கென்ன? விற்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும்.

இந்த மாத்திரை பெண்களின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பின்விளைவுகளைத் தரக்கூடியவை என்பதும், இதை எப்போதோ ஒருமுறை பயன்படுத்தினால் பரவாயில்லை என்பதற்குப் பதிலாக, எப்போதுமே பயன்படுத்தும் நிலைமை உருவாகி வருகிறது என்பதும்தான் நமது கவலைக்குக் காரணம்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்பற்ற கலவி நேர்ந்துவிட்டால், கலவிக்குப் பின்னர் 72 மணி நேரத்துக்குள் ஈ.ஸி. மாத்திரையைச் சாப்பிட்டு, கருவுறுதலைத் தடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறையில் இதன் பயன்பாடு பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

இந்த மாத்திரையை மூன்று நிறுவனங்கள் மூன்று பெயர்களில் வெளியிடுகின்றன. ஒரு மாத்திரை விலை ரூ. 60 முதல் ரூ. 100 வரை. இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த மாத்திரையை அறிமுகம் செய்தபோது நிர்ணயித்த விலை இதைவிடக் குறைவுதான். விற்பனை கூடக்கூட விலையையும் கூட்டுகிறார்கள்

.தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், தொடர்ச்சியாக நாள்தோறும் சாப்பிட வேண்டியதாக இருப்பதால், ஒரே ஒருமுறை மட்டுமே, அதுவும் கலவிக்குப் பின்பு, சாப்பிட்டால் போதும் என்கிற ஈ.ஸி. மாத்திரைக்கு பெண்கள் எளிதில் மாறிவிடுகிறார்கள்.இம் மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்த நேரிடும் பெண்ணுக்கு முதல் தொந்தரவு ஹார்மோன் சுரப்புகளில் பாதிப்பு. அதைத் தொடர்ந்து மாதவிலக்கு கோளாறுகளுக்கும் அது சார்ந்த உடல் வேதனைகளுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்த மாத்திரை மூலம் கருக்கலைப்பு சாத்தியமில்லை என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறினாலும், இந்த மாத்திரையின் செயல்பாடு என்னவோ "மைக்ரோ-அபார்ஷன்' என்பதாகத்தான் இருக்கிறது.ஆணாதிக்க உலகம் தங்களுக்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல், பெண்களை ஈ.ஸி. மாத்திரைகளைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கல்வி பயிலும் வளர்இளம் பெண்களுக்கு இந்த மாத்திரை கிடைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், ஆபத்தின் வீச்சு கற்பனைக்கும் எட்டாதது.

இந்திய வாழ்வியல் சூழலில் மிகச்சிறந்த கருத்தடைச் சாதனம் ஆணுறை மட்டுமே. இதனால் கருவுறுதல் தடுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. தற்போது ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு அதிகரிக்குமானால், இத்தகைய பாதுகாப்பு இல்லாமல், நோய்க்குள்ளாவது பெண் சமூகம்தான்.


இந்த மாத்திரைக்கான விளம்பரங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பட்டிதொட்டியில் உள்ள கிராமப்பெண்களும்கூட புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவான தகவலை தருகின்றன இந்த விளம்பரங்கள். ""இந்த மாத்திரைகளை ""வழக்கமான கருத்தடைச் சாதனங்களுக்கு ஒரு மாற்று'' என்பதைப்போல விளம்பரக் காட்சி அமைப்பது கூடாது என்று தில்லியில் நடைபெற்ற ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?


ஒரு பெண்ணுக்குக் கல்வியைக் கொடுத்தால் ஒரு குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததைப்போல என்று பேசுகிறோம். உடல் நலனைக் கெடுக்கும் மாத்திரைகளை எளிதாகக் கிடைக்கச்செய்து, கல்வியுடன் கலவியையும் பயிலட்டும் என்று அரசே வழிவகுத்தால் அதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.

சந்தைப் பொருளாதாரத்தை அனுமதிக்கிறோம் என்கிற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதும், தவறான பாதைக்குத் திசைதிருப்பப்படுவதும் நல்லாட்சிக்கு அடையாளமல்ல!

கட்டுப்பாடற்ற சமுதாயம் வளர்ச்சியின் அடையாளமல்ல. காட்டுமிராண்டித்தனத்தின் நுழைவாயில்!

தேங்க்ஸ் டு dinamani

Tuesday, September 8, 2009

சிறப்புப் பொருளாதார மண்டல கொள்ளை

கூட்டணி ஆட்சியால் ஏற்படுகிற ஒரு முக்கியமான நன்மை, ஆளும் கட்சி தன்னிச்சையாக விவாதமோ, எதிர்ப்போ இல்லாமல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்பது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சரவை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது. இதற்குக் காரணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பும் பிடிவாதமும்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் அரசியல்தான் என்றும், தீர்க்கதரிசனமான கண்ணோட்டம் அல்ல என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்தாலும், அவரது வாதங்களில் இருக்கும் உண்மையும், நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், விவசாயமும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை.

வியாபார நோக்கிலும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது என்கிற மம்தா பானர்ஜியின் கருத்தில் நியாயம் நிறையவே இருக்கிறது. சிங்கூரில் நடந்த போராட்டத்தால் டாடாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக நஷ்டம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்குபவர்கள், சிங்கூரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை.


அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகப் பல நூறு ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்படுவது விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், 70 சதவீத நிலத்தைத் தனியார் விலைக்கு வாங்கி இருந்தால், மீதமுள்ள 30 சதவீத நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்க வழிசெய்யும் மசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வந்தது. மேலே குறிப்பிட்ட 70 : 30 என்கிற விகிதாசாரம், தொழிலதிபர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துபேசி எடுத்த முடிவே தவிர, விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதல்ல என்பது மம்தாவின் வாதம்.

மேலும், ஒரு போகம் மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமியும், விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்களும் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்து. எதற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தக் காரணத்துக்காக அல்லாமல் நிலம் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்தப்பட்டால், நில உரிமையாளருக்கு அந்த நிலம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும்கூட மம்தா பானர்ஜியின் கோரிக்கை.


சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலை என்கிற பெயரில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்களான சாலை அமைப்பது, புதிய குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்துவது, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை நிறுவுவது ஆகியவற்றுக்காக விவசாய நிலங்கள் தகுந்த நஷ்டஈடு தரப்பட்டுக் கையகப்படுத்தப்படுவதை யாருமே எதிர்க்கவில்லை.

ஆனால், விவசாயிகளிடமிருந்து அரசின் உதவியுடன் குறைந்த விலைக்கு நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? விவசாயி தானாக நிலத்தை விற்கவில்லை. அரசின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நிலம் குறைந்த விலைக்குக் கையகப்படுத்தப்படுகிறது.

அப்படியானால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயிக்குக் கிடைக்க இருக்கும் அதிகரித்த விலை தரப்பட வேண்டியது நியாயம்தானே? விவசாயி தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த தனது வாழ்வாதாரத்தை இழக்கிறார். அவருக்கு மாற்று வேலையும், மாற்று இருப்பிடமும், லாபத்தில் பங்கும் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளில் என்ன தவறு? விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. அந்த இடங்கள் மறுபடியும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்களாகி விடுகின்றன

. போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்கிற காரணம் காட்டி, விவசாயம் லாபகரமாக இல்லை என்கிற சாக்கில் நிலங்களைக் குறைந்த விலைக்குத் தனியாருக்காக அரசே முன்னின்று கையகப்படுத்தும்போது ஒரு விஷயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏற்கெனவே விவசாயம் லாபகரமாக இல்லை என்பதாலும், கடின உழைப்புக்கு நாம் தயாராக இல்லாததாலும் கிராமப்புறங்களில் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது.


இதனால், உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வரைமுறையே இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்தித் தனியாருக்குத் தாரை வார்ப்பது தற்கொலை முயற்சி அல்லாமல் என்ன?

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. உலகில் உள்ள அத்தனை தட்பவெப்ப நிலைகளையும் உள்ளடக்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே.

இங்கே விளையாத பொருள்களே கிடையாது. விவசாயத்தை லாபகரமாக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வழி காண்பதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கருதினால், விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும்...

தேங்க்ஸ் டு dinamani

Monday, September 7, 2009

3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டியபிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைநோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது

.நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியைஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!


மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவைபல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன


.தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன்பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம்செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.


அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டுஇழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில்அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.


இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத்தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.

தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில்மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.

ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம்இருக்கிறது!

தேங்க்ஸ் டு dinamani

Wednesday, August 12, 2009

அதிகரித்து வரும் வறுமையும், அதிகரிக்காத உணவு உற்பத்தியும்

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பற்றிய ஒரு செய்திக் குறிப்பு, விவரம் அறிந்த பலரையும் திடுக்கிட வைத்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 450 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பிரச்னையில் மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த சாதனையே வேதனைக்குரியதாகத்தான் தொடர்கிறது. ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களில் 38 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதவர்களாகவும், 15 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உடல் வளர்ச்சி இல்லாமலும் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. மொத்தத்தில் எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 43 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் போதிய எடை இல்லாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.


சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. அதிகரித்து வரும் வறுமையும், அதிகரிக்காத உணவு உற்பத்தியும் வர இருக்கும் மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறிகள் என்று சுட்டிக்காட்டி இருக்கும் எம்.எஸ். சுவாமிநாதன், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால், இவற்றை ஒட்டுமொத்தமாகக் கருதித்தான் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்கிறார். ""நீர்மூழ்கிக் கப்பல்களும், விண்கலன்களும் செய்து நம்மால் சாதனை படைக்க முடியுமானால், உணவுப் பாதுகாப்பை மட்டும் ஏன் உறுதி செய்ய முடியவில்லை?'' என்பது அவரது நியாயமான கேள்வி.


வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென்னும் இந்தப் பிரச்னையை இன்னொரு கோணத்தில் அணுகுகிறார். ""ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொள்ள வேண்டுமானால், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பெண்கள் பிரச்னைகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவில் புறக்கணிக்கப்படும் இரண்டு முக்கிய விஷயங்கள், ஊட்டச்சத்துக் குறைவும், அனைவருக்கும் உணவு முறையாகக் கிடைக்க வழி செய்யாமல் இருப்பதும்தான்'' என்பது அமார்த்தியா சென்னின் கருத்து. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உணவு என்பது கல்வி மற்றும் வேலையைப்போல ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக்கப்படுகிறது. இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ ரூ. 3 வீதம் மாதமொன்றுக்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை தரப்படுகிறது. சட்டம் இயற்றினால் மட்டும் போதுமா? ஒருசில மாநிலங்கள் தவிர, இந்தியாவில் முறையாகப் பொது விநியோக முறையே நடைமுறைப்படுத்தப்படாதபோது, இப்படி ஒரு சட்டத்தால் என்ன பயன்? வறுமைக்கோட்டுக்குக் கீழே என்று சொல்லப்படும் விதிமுறையின்கீழ், வீடும், விலாசமும் இருப்பவர்கள்தானே வரமுடியும்? வீதியில் வாழ்வோர் இந்திய மக்கள்தொகையில் 20 விழுக்காட்டுக்கும் மேல் என்பதைப் பற்றியோ, அவர்கள் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்யத் தொழிலும் இல்லாமல், தெருவோரச் சிறார்களை உருவாக்கும் உன்னதப் பணியில் மட்டுமே ஈடுபட்டிருப்பதைப் பற்றியோ, ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தானே கவலைப்படுகின்றன!


காமராஜ் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து நடைபெறும் சத்துணவுத் திட்டமும் தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைவதற்கு வழிகோலின. தமிழகத்தைப் பார்த்து முந்தைய வாஜ்பாய் அரசு, இந்தத் திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது, பல மாநிலங்களில் இப்போது இந்தத் திட்டம் செயல்படுகிறது என்பது ஆறுதலான விஷயம்.


அதேபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ், தாய்மை அடையும் மகளிருக்கு மாதமொன்றுக்கு ரூ. 1,000 வீதம் ஆறு மாதங்கள் உதவித்தொகை அளிப்பது என்கிற அற்புதமான திட்டத்தை இப்போதைய தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தவும் செய்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தனியார்மயப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தில் காட்டுவதில்லை என்கிற சந்தேகம் சமீபகாலமாக எழுந்திருக்கிறது. கர்ப்பமடைந்து ஆறாவது மாதத்திலிருந்து மாதந்தோறும் தரப்பட வேண்டிய ஆயிரம் ரூபாய் பலருக்கும் குழந்தை பிறந்து ஓராண்டான பிறகுதான் பல்வேறு சிக்கல்களுக்கிடையில் தரப்படுகிறது என்று கேள்வி. தாயாருக்கு ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் எப்படி ஊட்டமாக பிறக்கும்?


நமது மூதாதையர்கள், புண்ணியம் என்ற பெயரிலும், மதத்தின் கோட்பாடு என்றும் வசதி படைத்தவர்களை ஆங்காங்கு அன்னசத்திரங்கள் கட்டி வைக்கச் சொன்னதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது!

தேங்க்ஸ் டு தினமணி

Wednesday, June 24, 2009

இளிச்சவாயன் இந்தியன் ?

"கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி; கிலோ ரூ.40-க்கு விற்ற கத்தரிக்காய் கிலோ ரூ.2.50க்கு விற்கப்பட்டதால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம்' என்ற செய்தியைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஓர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதலீடு செய்து, போட்ட முதல்கூட கிடைக்கவில்லை என்றால் அந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும்.

இப்போதே இந்த நிலைமை என்றால், மரபீனி மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காய் சந்தைக்கு வந்து குவியும்வேளையில் இந்த விவசாயிகள் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, உழவர் திருநாளில், மரபீனி மாற்றப்பட்ட பி.டி.கத்தரிக்காயின் வணிக உற்பத்திக்கு அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். இந்த அனுமதியைப் பெற்றிருப்பது மைக்கோ நிறுவனம். இது மாண்சான்டோ நிறுவனத்தின் ஏஜன்ஸி.


உலகில் மனிதர்கள் உண்ணும் உணவுப்பயிரில் இத்தகைய மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதில் முந்திக்கொண்டிருக்கிறது இந்தியா. அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட மக்காச்சோளம், சோயா ஆகியன கால்நடைத் தீவனப் பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை பகுக்கப்பட்ட உணவாக (புராஸஸ்டு புட்) வரும்போது மரபீனியின் தாக்கம் சிதைந்த நிலையில் மனிதர்கள் உண்ணலாம் என அனுமதிக்கப்பட்டாலும் அங்கே அதை உண்பார் யாருமில்லை.
உலகில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் சுமார் 5 லட்சம் ஹெக்டேரில் கத்தரிக்காய் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். பாரம்பரிய கத்தரிக்காய் சாகுபடியில் 50 சதவீதம் உற்பத்தி பூச்சிகளால் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தேசிய இழப்பு ஆண்டுக்கு ரூ. 1000 கோடி என்றும் கூறுகின்ற மைக்கோ நிறுவனம், பி.டி. கத்தரிக்காயை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு ஹெக்டேரில் குறைந்தது ரூ. 16,000 சம்பாதிக்க முடியும் என்று கருத்துரு அளித்து, முதலில் தங்கள் சோதனைப் பயிரிடல் அனுமதியைப் பெற்றனர். இப்போது பி.டி. கத்தரிக்காயால் மனிதருக்கு பாதிப்பு இல்லை என்று சொல்லி, வணிக உற்பத்திக்கும் அனுமதி பெற்றுள்ளனர்.


இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கண்காணிப்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த காய்கறி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனைச் சாகுபடி முடிந்து, ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகுதான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், பல உண்மைகள் அரசு அதிகாரிகள் துணையுடன் மறைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது. இதுவரை இதற்கு அரசு பதில் தரவில்லை.
பி.டி. கத்தரிக்காயை உண்பதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை, நச்சுப்பொருள் ஆகியன குறித்து எலிகளிடம் ஆராய்ந்து பார்த்ததில், பாதகமான அம்சங்கள் ஏதுமில்லை என்று மைக்கோ தெரிவித்தாலும், இந்த பி.டி. கத்தரிக்காயை சமைக்கும்போது அதில் மரபீனி எத்தகைய மாற்றம் கொள்கிறது, அவை உண்ணுகிற மனிதரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்ற முழுஆய்வு விவரங்களை மைக்கோ மறைத்துவிட்டது என்று குறைகூறப்படுக்கிறது.
பி.டி. கத்தரிக்காய் சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவு மிகவும் குறைவாகும், உற்பத்தி அதிகரிப்பால் லாபம் அதிகம் கிடைக்கும் என்று சொன்னாலும், இந்த விதைகளை என்ன விலைக்கு விற்கத் தீர்மானித்திருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிட மறுக்கிறது மைக்கோ நிறுவனம். இந்த விதைகள்தான் இந்த நிறுவனத்துக்கு லாபம் தரும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருந்தாலும், விதைகளின் விலையைத் தீர்மானிப்பதில் எந்த உரிமையையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
இதுஒருபக்கம் இருக்கட்டும். இந்த பி.டி. கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அதன்மீது லேபிள் ஒட்டும் நிபந்தனைகள் எதையும் இந்திய அரசு விதிக்கவில்லை. ஆகவே இது பாரம்பரிய கத்தரிக்காயா அல்லது பி.டி. கத்தரிக்காயா என்று திண்டாடப்போவது மக்கள்தான்.
மேலை நாடுகளில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பு இல்லை என்பதுடன் எதிர்ப்பும் அதிகம் என்பதால், இந்தியா பக்கம் கண் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இன்னும் 41 உணவு உற்பத்திப் பொருள்களுக்கு சோதனை சாகுபடிக்கான அனுமதியையும் மைக்கோ பெற்றுள்ளது.


ஏற்கெனவே பி.டி. பருத்தி வெளியாகி அதன் பாதகங்கள் குறித்து நிறைய செய்திகள் வந்தாகிவிட்டன. இப்போது உணவுப்பொருளான கத்தரிக்காயில் நுழைந்திருக்கிறார்கள். உலக நாடுகள் எதுவுமே அனுமதி அளிக்காத பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க இந்தியாவுக்கு மட்டும் என்ன அப்படியொரு அவசரம், அல்லது அவசியம்? எதற்காக இப்படி வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கிறது இந்தியா?

கத்தரிக்காய் காய்த்தால் கடைத்தெருவுக்கு வந்தாக வேண்டும் என்பது பழமொழி.

தேங்க்ஸ் டு dinamani

Tuesday, May 26, 2009

வாழ்க்கையில் ஒரு சவால்

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

தேங்க்ஸ் - என்.கணேசன்.

கர்ம யோகம்

பலனுக்காகத் தானே பாடுபடுகிறோம், ஒரு செயலைச் செய்ய முற்படுகிறோம். ஆனால் பலனையே எதிர்பாராது வேலை செய் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கர்மயோகத்தைக் குறை கூறுவது உண்டு. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று ரத்தினச் சுருக்கமாக கர்மயோகத்தைச் சொல்லும் போது இப்படித் தோன்றுவது தவறும் அல்ல. ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மயோகம் முரண்பாடில்லாதது என்பதையும் அது ஒரு அருமையான செயல் மேம்பாட்டுத் தத்துவம் என்பதையும் நாம் உணர முடியும்.

செயலிலேயே விளைவும் இருக்கிறது, எனவே விளைவைப் பற்றிய கவலையோ, சந்தேகமோ தேவையில்லை என்பதையே பகவான் கூறுகிறார். ஒரு பென்சிலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கீழே போடத் தயாராக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கைவிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே எனக்கு சுதந்திரம் உண்டு. கைவிட்டு விட்டால் அந்த செயலிலேயே அது கீழே விழும் என்ற இயற்கை விதியாகிய பலன் இருக்கிறது. அதை விட்ட பின் கீழே விழுமா என்ற சந்தேகமும்,
கீழே விழுந்து விட்டதே என்ற வருத்தமும் ஏற்பட்டால் அது முட்டாள்தனமே.

ஒரு ஊருக்குப் போகிற பாதையை வழிகாட்டிப் பலகை பார்த்து அந்தப் பாதையில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் நடக்க ஆரம்பித்தபின் ஊரின் தூரம் ஒவ்வொரு அடியாகக் குறைந்து கொண்டே வருகிறது இயற்கையே. நடக்கும் வேகத்திற்கேற்ப சீக்கிரமாகவோ, தாமதமாகவோ நாம் போய் சேர்வது உறுதி. ஊருக்குப் போய் சேர்வோமா என்ற சந்தேகமோ, பரபரப்போ தேவையில்லை.

எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்கிறார் பரமாத்மா.

இதை சுவாமி சின்மயானந்தர் அழகாகச் சொல்வார். "In fact, the reward of an action, when we understand it properly, is not anything different from the action itself. An action in the PRESENT, when conditioned by a FUTURE time, appears as the fruit of action. In fact, the action ends or fulfils itself as reaction or fruit in future."

பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது நிச்சயமாக நமது செயல் திறத்துக்கு குறுக்கீடுகளை ஏற்படுத்தும். சீரான மனநிலையில் சிந்தித்து தேவையானவற்றை சிறப்பாகச் செய்ய பற்று நம்மை அனுமதிப்பதில்லை. பல சமயங்களில் தலைக்கனம் ஏற்படுத்தி தொடர்ந்து செய்யும் காரியங்களில் அலட்சியத்தை ஏற்படுத்தி விடக் கூடியது. எனவே தான் பற்று இன்றி செயல்கள் புரிய கர்மயோகம் அறிவுறுத்துகிறது.

பலனில் பற்று என்பது வேறு வகைகளிலும் நம் செயல் திறனைக் குறைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நல்ல செயல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ குறைந்து போனால் அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு அடுத்த செயல்களிலும் தொடரும்; நமது செயல்திறன் குறையும்.

நம் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நம் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும்.

உங்கள் திறமைகள் பலன் தராமல் இருக்கப் போவதில்லை. பூத்துக் குலுங்கும் மலர்கள் வண்டுக்கு சீட்டு எழுதி அனுப்பத் தேவையில்லை. ரமண மகரிஷி போன்ற ஞானிகள் சீடர்களையும் பக்தர்களையும் தேடிப் போனதில்லை. என்ன சொன்னால் பிரபலமாவோம் என்று கவலைப் பட்டதில்லை. ஏன் ஆரம்பத்தில் அதிகமாக ரமண மகரிஷி வாய் திறந்து கூடப் பேசியதில்லை. ஆனால் அவரிடம் இருந்த ஆன்மீக சக்தி காந்தமாக உலகை அவர் பக்கம் ஈர்த்தது.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. அப்படி முழுமையாகச் செய்த செயல்கள் என்றும் சிறக்காமல் போனதில்லை. காலத்தை வென்று நிற்கும் அத்தனை அற்புத சாதனைகளும் அப்படி செய்யப்பட்டவையே.

எனவே செயலையும் செயல்முறையயும் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள். உற்சாகமாகச் செய்யுங்கள். செயலைச் செய்யும் போது உயிரோட்டத்துடன் இருங்கள். உங்கள் செயல் சிறப்பாக அமையும். பலனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் செயலிலேயே பலனை விதைத்து விட்டீர்கள். தக்க காலத்தில் பலன் வந்தே தீரும். அது இயற்கையின் விதி. இதுவே கர்மயோகம்.

(மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகம் பற்றி விவரித்ததோடல்லாமல் மகாபாரதத்தில் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். பரம்பொருள் தேரோட்டியாக பணி புரிவதா என்று பின் வாங்கவில்லை. தேரோட்டி என்பது யுத்தம் ஆரம்பிக்கும் போது தயார் நிலையில் இருக்கும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வேலையைத் தொடங்குவது அல்ல. அதிகாலை எழுந்து குதிரையைக் குளிப்பாட்டி அதனுடன் அன்பான உறவை சாரதி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் யுத்தகளத்தில் குதிரை சொன்னபடி இயங்கும் என்பது நிச்சயமில்லை. ஸ்ரீகிருஷ்ணர் குதிரைகளைக் குளிப்பாட்டும் அழகை வியாசர் மிக அழகாக மகாபாரதத்தில் விவரிக்கிறார்.

அதுமட்டுமல்ல தேரில் இருந்து போரிடும் வீரன் தேர் எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதை தன் காலால் தேரோட்டியின் தோளில் அழுத்தி சமிக்ஞை செய்வான். அதன்படி தான் சாரதி தேரை ஓட்ட வேண்டும். அப்படி அர்ஜுனனின் கால்மிதிகளை பதினெட்டு நாள் வாங்கிக்கொண்டு சாரதியாக இருந்திருக்கும் பகவான் கர்மயோகத்தை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் விளக்கி இருக்கிறார்.)


தேங்க்ஸ் -என்.கணேசன்

கோபத்தைக் களைவது எப்படி?


லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தகைளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


தேங்க்ஸ் - என்.கணேசன்

Saturday, May 16, 2009

தொடரும் சோகம்

அதிக மதிப்பெண் பெற்றால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உண்மைதான். அதற்காக மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல தனியார் பள்ளிகள் நடத்துவதும் இதை கல்வித்துறை கண்டும் காணாமல் இருப்பதும் புரியாத புதிர்.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துகிறது. பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சதம் அடித்துள்ளது. என்றாலும்கூட, தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவியர் மட்டும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் முற்பகல் மட்டும் இவர்களுக்காகச் செயல்படுகிறது.

பிளஸ்-2 தேர்வுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் பிளஸ்-2 தொடங்கிவிடுகிறது. இந்த மாணவர்கள் ஜூன் மாதம் பிளஸ்-2 வகுப்புக்குச் சென்றவுடன் அவர்களுக்குத் தொடர்ந்து நாள்தோறும் தேர்வுகள் வைத்துப் பழக்குகிறார்கள். வினா வங்கி முழுவதற்கும் பதில் சொல்லும் யந்திரன் போல மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி.

"அரசுப் பள்ளிகள்தான் நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கின்றன; தனியார் பள்ளிகளிலாவது இத்தகைய நல்ல கல்வி கிடைக்கட்டுமே' என்ற தவறான கருத்தாக்கம் பொதுமக்களிடம் உள்ளது. மக்களிடம் ஏற்படும் இந்த நல்ல எண்ணம்தான் தனியார் பள்ளிகளுக்கு முதலீடு என்பதையும், மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக வைத்து, பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் பொதுமக்கள் அறிவதில்லை.

தங்கள் பள்ளி மாணவர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும் தொடர்ந்து இத்தனையாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி என்றும் தம்பட்டம் அடிக்கத்தான் இப்படியாக மாணவர்களை பிழிந்தெடுக்கிறார்கள். இந்த மாணவர்கள் எந்தெந்தக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற பட்டியலைத் தயாரித்து அதையும் விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்புடன் கல்விக் கட்டணத்தை மேலும் மேலும் உயர்த்துகிறார்கள். சில தனியார் பள்ளிகள், அவர்தம் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பணம் கொடுத்து (பங்குச் சந்தை போலவே) வாங்கி, கட்டணச் சலுகை தந்து, பிளஸ்-2 தேர்வில் அவர்கள் பெறும் சிறப்புகளைத் தங்களுடன் அடையாளப்படுத்தி கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். பெற்றோரால் இந்தக் கல்விக் கட்டணத்தை மறுக்க முடியாத நிலைமையை உருவாக்குகிறார்கள்.

இந்த நடைமுறை மாணவர்களிடம் மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்பதுடன் அகில இந்திய அளவில் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலும் தடையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெறும் கேள்வி-பதிலை மட்டுமே மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் சேரும்போது, அவர்கள் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மூளைத் திறன் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. மனவெறுமையை இட்டு நிரப்ப சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் இரக்கமற்ற முரடர்களாக ஆகிறார்கள். சிலர் படிப்பின் மீது வெறுப்புற்று உயர்கல்வியில் கரையும் நிழல்களாக மாறுகிறார்கள்.

இந்த நடைமுறையின் இன்னொரு பாதிப்பு தமிழகத்திற்கானது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடிவதில்லை. காரணம், அங்கு கேட்கப்படும் கேள்விகள், அடிப்படை அறிவியலில் மூளையை சிந்திக்கத் தூண்டுபவை. ஆனால் இங்கோ வெறும் பல ஆயிரம் கேள்விக்கு உடனே பதில் எழுதும் பயிற்சி மட்டுமே தரப்படுகிறது. அரசுப் பள்ளிகளை மனதில் வைத்து, பாடத்திட்டங்களையும் குறைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு அவசியம் இல்லை என்றாகிவிட்டது. இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிகிறது.

இந்தியா முழுவதும் திறந்து கிடக்கும், மிகக் குறைந்த கட்டணத்திலான உயர்கல்வி வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் இழந்து வருகிறார்கள்.

ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றும், இந்தக் கல்வி ஆண்டிலாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படாதா என்றும் ஆதங்கப்படுவதுதான் நமது தலைவிதி என்று நினைத்துவிட முடியாது. ஏமாற்றங்களால் துவண்டு விட்டால் மாற்றங்கள் ஏற்படாது!

தேங்க்ஸ் டு dinamani

Thursday, April 30, 2009

சுவிஸ் வங்கிப் பணம் இந்தியாவுக்கு வருமா? --- அர்ஜுன் சம்பத்

உலகத்திலேயே மிக வளம் பொருந்திய நாடாக இந்தியத் திருநாடு திகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் 36% இந்தியாவின் கைகளில் இருந்தது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, அடிமைப்படுத்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தனர் என்பதை நாம் சரித்திரத்தில் படித்திருக்கிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு வெள்ளையர்கள் கொள்ளையடித்ததைவிட மிக அதிகமாக, நம்மவர்களே நமது நாட்டின் வளத்தை சுரண்ட ஆரம்பித்தனர். உலகின் வறுமைசூழ்ந்த நாடுகளில் ஒன்றாக நமது நாடு தற்போது மாறியுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை ஏழை, எளிய மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். வறுமைக்கோடு என்றால், ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் இருப்பவர்கள். இன்னொருபுறத்தில் ஒரு சிறிய கூட்டம், இந்தியாவின் வளத்தின் பெரும்பகுதியை அனுபவித்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறது. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட, ஊழல் மூலம் சுரண்டப்பட்ட கணக்கில் வராத பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சமீபகாலமாக பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.


இங்கிலாந்தில் நடைபெற்ற பொருளாதார வளம் பொருந்திய ஜி-20 நாடுகளின் மாநாட்டிலும் இதுகுறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. தற்போது சர்வதேச அரங்கில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்களது நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டுவதற்காக மேற்கண்ட நாடுகள் பெரும் முயற்சியை எடுத்து வருகின்றன. சுவிட்சர்லாந்து வங்கிகள் போன்ற பணம் பதுக்கும் வங்கிகளில் இந்திய நாட்டுப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல, மேற்கண்ட நாடுகளின் பணமும் அங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள், சுமார் 40-க்கும் மேலுள்ளன. சுவிட்சர்லாந்து, மலேசியாவை ஒட்டியுள்ள தீவுகளில் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள் உள்ளன. இத்தகைய வங்கிகளில் கணக்கில் வராத கருப்புப் பணம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கொள்ளையடிக்கப்படுகின்ற பணமும் பதுக்கி வைக்கப்படுகின்றது.


இந்த வங்கிகளில் மூலதனம் செய்து வட்டி வருவாயை எதிர்பார்த்து யாரும் இங்கே கொண்டு போய் பணத்தைப் பதுக்குவதில்லை. இந்த வங்கிகள் கொடுக்கும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே, இங்கு பணத்தைப் பதுக்கி வருகிறார்கள். இந்த வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? யார் மூலம் வருகிறது? எதனால் வருகிறது? என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. பணம் கொடுத்தால், பதுக்கி வைத்து ரகசியத்தைக் காப்பாற்றி பணத்தைத் திருப்பிக் கொடுப்பார்கள். இதன் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் கொள்ளையடிப்பவர்களும், கொலை செய்பவர்களும், போதை மருந்து கடத்துபவர்களும், ஆயுத பேர ஊழல்கள் செய்பவர்களும் தங்களது ரத்தக் கறை படிந்த பாவப் பணத்தை இத்தகைய வங்கிகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதன் காரணமாக, உலக அளவில் பயங்கரவாதமும், வன்முறைச் செயல்களும், தேச விரோத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதச் செயல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு இந்த வங்கிகள் பெரிதும் காரணமாக உள்ளன.



சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கவும், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கவும் பெருமுயற்சி எடுத்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இது விஷயத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிக்கிடப்பதை மீட்பதற்காக அமெரிக்காவில் போதிய சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறார் ஒபாமா. சர்வதேச அளவிலும் உரிய சட்ட விதிமுறைகளின் மூலம் முயற்சி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் இது விஷயத்தில் சுவிட்சர்லாந்தின் மீதும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விவாதிப்பதற்காக மட்டுமே தாம் ஜி-20 மாநாடுகளில் பங்கேற்றிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜெர்மனி புலனாய்வு அதிகாரிகள் இத்தகைய பணம் பதுக்கும் வங்கி ஒன்றிலிருந்து ரகசியக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை சாமர்த்தியமாகப் பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் தினசரி ஒன்றில், நிதி அமைச்சரின் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியர்கள் சிலர் இடம்பெற்றிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்களை இந்திய நாட்டுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நமது நாட்டு ஆளுங்கட்சியினரும், பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும் இதுகுறித்து மெüனம் சாதித்து வருகின்றனர். ஜி-20 மாநாட்டில் இதுபற்றி நமது நாட்டின் சார்பில் எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஜி-20 மாநாடுகளில் இதுகுறித்து விவாதிக்க முடியாது என்றும், சுவிட்சர்லாந்து நாட்டின் மீது பழிசுமத்துவதற்கான இடம் ஜி-20 மாநாடு அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் பெரும் பொருளாதார வல்லுநர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் சிற்பிகள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டுச் செல்வத்தை மீட்கும் நோக்கில் இல்லை. உலகிலுள்ள எல்லா நாடுகளும், பணம் பதுக்கும் இத்தகைய வங்கிகளிலுள்ள தங்கள் நாட்டுச் செல்வத்தை மீட்பதற்குரிய முயற்சிகளைச் செய்து வருகின்றன. தற்போது இது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

2006-ம் ஆண்டு முதல் தற்போதைய 2009-ம் ஆண்டு வரை உள்ள கணக்கின்படி, உத்தேசமாக 74 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் இதுகுறித்து பெரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உலகளாவிய கருப்புப் பணத்தில், அதாவது பதுக்கப்பட்ட பணத்தில் 56% இந்தியர்களின் பணம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு தொடர்பு கொண்டால் தங்கள் நாட்டு சட்டதிட்டங்களின்படி உரிய பதில் தருவோம் என்று சுவிட்சர்லாந்துக்கான நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்கான சுவிட்சர்லாந்தின் சிறப்புத் தூதரும் கருப்புப் பணம் நிறைய உள்ளது என்பது உண்மை என்று நமது தலைநகரிலேயே உறுதிப்படுத்தியுள்ளார். இது தேர்தல் நேரமாக இருக்கின்ற காரணத்தினால், தற்போது இந்தப் பிரச்னை மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாளில் சுவிஸ் வங்கியில் முடங்கிக் கிடக்கும் பணத்தை மீட்கப் போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விஷயம் இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டுகளும் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பதில் சொல்லும் நிலையில் சுவிஸ் நாடோ அல்லது இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகளோ இல்லை. இப்போது சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரும் அரசியல் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இத்தகைய வங்கிகளின் செயல்பாடுகள் காரணமாக, உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களும், சட்டவிரோதச் செயல்களும் பெருகி வருகின்றன. இதுகுறித்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் கவலை கொண்டுள்ளன. இந்தியாவைப்போல அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்தியாவில் உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்காக ஆர். வெங்கட்ராமன் நிதி அமைச்சராக இருந்தபோது தானாக முன்வந்து கணக்குகளை ஒப்படைத்தால், அதை ஏற்றுக் கொண்டு கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உரிய சட்டப் பாதுகாப்பை கொடுப்பதாக உறுதியளித்தார். அதன் காரணமாக ஒரு சிலர் குறைந்த அளவு கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வந்தனர்.

மேற்கண்ட நடவடிக்கைகளைப் போல தொடர்ந்து நாம் செயல்பட்டால், உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதுபோல, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தையும் வெளியே கொண்டு வர முடியும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை புதிதாக அமைகின்ற ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதன் மூலம் இந்திய நாடு பெரும் வல்லரசாகவும், நல்லரசாகவும் உருவெடுக்க முடியும்.

தற்பொழுது இரண்டு காரணங்களுக்காக நாம் இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒன்று, மேலும் கருப்புப் பணப் புழக்கமும், பயங்கரவாதிகளின் செயல்களும் ஊக்குவிக்கப்படாமல் இருக்க வேண்டும். இரண்டு, நமது தேசத்தின் வறுமை நீங்கி, வளம் பெருகிட வேண்டும். இத்தகைய நடவடிக்கையை நாம் எடுக்கவில்லையெனில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். நமது தேசத்தின் முன்னேற்றம் தடைபடும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கே நமது ஓட்டு என்பதையும் நம் மக்கள் உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்.

அழியும் விவசாயம்

"உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று வள்ளுவப் பேராசானும், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று மகாகவி பாரதியும் பாடிய நாட்டில் உழவுத் தொழில் என்பது அழிந்து வருவது வேதனையிலும் வேதனை. விவசாயக் குடும்பங்களில் இளைஞர்கள் கல்லூரிப் படிப்புக்குச் சென்றுவிட்டதால் நகரங்களில் குடியேறி கிராமங்களுக்கே திரும்பாத நிலையில், பல கிராமங்கள் வெறிச்சோடிக் கொண்டிருக்கின்றன.

போதாக்குறைக்கு, விவசாயம் என்பது லாபகரமல்லாத, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தொழிலாகிவிட்டது. அவ்வப்போது, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்குக் காப்பீடு என்று சில சலுகைகள் தரப்படுவதன்றி, பெரிய அளவில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏதாவது செய்கிறதா என்றால் சந்தேகமே.

வேளாண் துறையினர் ஆயிரம் விளக்கங்கள் கூறலாம். பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம். ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்குக் காட்டலாம். மாதிரிப் பண்ணைகள், இலவச மின்சாரம் மற்றும் விதைகள், செயல் பயிற்சிகள் எல்லாம் உங்கள் கண்ணில்படவில்லையா என்று கேட்கலாம். இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காணவில்லையே, ஏன்? அடிப்படைப் பிரச்னை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல. விவசாயக் கூலிக்கு ஆள்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை. அப்படியே ஆள்கள் கிடைத்தால், அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது. தடையில்லாத மின்சாரம் கிடையாது. இதெல்லாம் இருந்து, வங்கிக் கடனும் கிடைத்துப் பயிரிட்டு, உரமிட்டு, அறுவடை செய்தால் விளைபொருளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. சந்தைப் பொருளாதாரம் என்கிற சாக்கில் இடைத்தரகர்கள் கொழிக்கிறார்களே தவிர பயிரிடும் விவசாயிக்கு எஞ்சுவதென்னவோ வறுமையும் கடனும்தான். நிலத்தை விற்கலாம் என்றால் வாங்க ஆள் கிடையாது. விளைநிலத்தை வீட்டு மனையாக்க முனைவோரும் சரி, அடிமாட்டு விலைக்கல்லவா விவசாயிகளை ஏமாற்றி விடுகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில்கூட விவசாயத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாம் இங்கே பங்குச் சந்தையையும் சென்செக்ûஸயும் மட்டுமே முன்னிறுத்தி நமது திட்டங்களையும், செயல்பாடுகளையும் வகுக்கிறோமே, அவர்கள் அப்படிச் செய்வதில்லை.


அமெரிக்கப் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்து வரும் இந்த வேளையில்கூட, விவசாயிகளுக்கான சலுகைகள் எதுவுமே குறைக்கப்படவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவது, இளைஞர்களைப் பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபடத் தூண்டுவது, கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ஊக்கமளிப்பது, பாசன வசதிகளை அதிகரிப்பது, விளைபொருள்களுக்கு அதிக விலை கொடுத்து விவசாயிகள் தொழிலை விட்டுவிடாமல் ஊக்கப்படுத்துவது என்று இந்தப் பிரச்னையை அரசு அணுக வேண்டாமா? அறுவடைக்குப் பிறகு, சேமிப்பு மற்றும் விற்பனை வரை விவசாயிக்கல்லவா முன்னுரிமை தந்து திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்? விளைநிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதுபோல ஒரு நரக வேதனை எதுவும் கிடையாது என்பது விவசாயம் செய்தவர்களுக்குத்தான் தெரியும். உழுது பயிரிட்டு, பாதுகாத்து அறுவடை செய்து ஆனந்தப்பட்ட ஒரு விவசாயிக்கு வேறு வேலைக்கோ, தொழிலுக்கோ போக மனம் ஒப்பாது. விவசாயம் பண்ண முடியவில்லை என்கிற இயலாமைதான் பலரை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளுகிறது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கோரியிருப்பதைப்போல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும். மத்திய அரசின் சம்பளக் கமிஷன்போல, திட்டக் கமிஷன்போல, வேளாண்மைக்கும் ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவின் உணவு உற்பத்தித் தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும். அது உறுதி செய்யப்பட்டால்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நகர்ப்புறங்களிலிருந்து மீண்டும் மக்களைக் கிராமப்புறங்களுக்குத் திரும்பும்படி செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி, விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பதும், அதிகாரிகளைப்போல விவசாயிகள் வாழ வழி வகுப்பதும்தான். உழுது, விதைத்தறுப்பாருக்கு உணவில்லை என்கிற நிலைமை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்!

Tuesday, April 21, 2009

Privacy Policy for www.yogibala.blogspot.com

If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at yrskbalu@gmail.com.

At www.yogibala.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.yogibala.blogspot.com and how it is used.

Log Files
Like many other Web sites, www.yogibala.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable.

Cookies and Web Beacons
www.yogibala.blogspot.com does use cookies to store information about visitors preferences, record user-specific information on which pages the user access or visit, customize Web page content based on visitors browser type or other information that the visitor sends via their browser.

DoubleClick DART Cookie
.:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.yogibala.blogspot.com.
.:: Google's use of the DART cookie enables it to serve ads to users based on their visit to www.yogibala.blogspot.com and other sites on the Internet.
.:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html

Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include ....
Google Adsense


These third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.yogibala.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see.

www.yogibala.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers.

You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.yogibala.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites.

If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites.

Friday, April 17, 2009

கவலையைக் குறைக்க இரு பட்டியல் - கணேசன்

பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனனிடம் அழகாகக் கூறுவான். "வீண் கவலை காணிட வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ".

திருதராஷ்டிரன் கூறியது போல் கவலைப்படுவதற்கு காரணங்களைப் பட்டியல் இடுவது கஷ்டமான காரியம் அல்ல. நம் ஒவ்வொருவரிடமும் நீளமான பட்டியல் இருக்கவே இருக்கிறது. பட்டியலில் ஒன்று குறையும் போது ஒன்பது சேர்ந்து கொண்டு பட்டியல் மேலும் நீள்கிறது.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது. "உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலை". மனித உடல் உள்ள வரை, மனிதனுக்கு உயிர் உள்ள வரை, அவன் கவலைகளை சேர்த்து கடலில் போட்டால் அந்த கடல் அளவும் போதாதாம். செத்தால் தான் நிம்மதி என்று இந்த வழிச் சிந்தனை சொல்கிறது.

இப்படி இருக்கையில் கவலையைக் குறைக்க அல்லது மறக்க மனிதன் எத்தனையோ முயற்சி செய்கிறான். இந்தக் கவலைக் கடலைக் "குடித்தே" குறைக்க நினைப்பவர்கள் உள்ளனர். வேறெதுவும் குறைக்காது என்பது அவர்கள் வாதம். ஆனால் அந்த வாதம் முட்டாள்தனம். போதை தெளிந்து பார்க்கையிலும் கவலைகள் அப்படியே இருக்கும் (போதையால் பிரச்சினைகள் பெருகாமல் இருந்தால்).

அதிகம் கவலைப்படுபவர்களே! உங்கள் கவலையைக் குறைக்க இரு பட்டியல்கள் தயாரியுங்கள். ஒன்று உங்களிடம் உள்ள நல்லவற்றின் பட்டியல். எத்தனையோ பேருக்குக் கிடைக்காத எத்தனையோ நல்லவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதையெல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

"காலில்லாதவனைப் பார்க்கும் வரை செருப்பில்லை என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறியவனைப் போல எத்தனையோ விஷயங்களில் உங்கள் கவலை அர்த்தமில்லாதது என்பதை உணர்வீர்கள்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு.

ஞானி ஒருவர் தன்னிடம் கவலையுடன் வந்த மனிதனின் அறிவுக் கண்களைத் திறக்க நினைத்தார். "உனக்கு கண்கள் இருக்கின்றன. குருடாக இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார். உனக்குக் காது கேட்கிறது. செவிடாக உள்ள லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார்....." என்று ஆரம்பித்து அவனிடம் உள்ளவற்றின் பட்டியலை எல்லாம் சொல்லி அவை இல்லாமல் இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்க்கச் சொன்னார். கடைசியில் "உனக்கு ஒரு அழகான கார் உள்ளது. வாகனமே இல்லாத லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்" என்று முடித்தார்.

ஆனால் கவலை குறையாத அந்த மனிதன் சோகமாகச் சொன்னான். "ஸ்வாமி! என்னிடம் உள்ள அத்தனையும் என் பக்கத்து வீட்டுக்காரனிடமும் இருக்கின்றன. ஆனால் அவனிடம் கூடுதலாக இன்னொரு காரும் இருக்கிறதே?"

இதற்கு என்ன செய்வது? இவன் பார்வை பக்கத்து வீட்டுக்காரனுடன் நின்று விடுகிறது. குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அடுத்தது இரண்டாவது பட்டியல். உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள், துக்கங்கள் என்னென்ன என்பதையும் அந்தப்பட்டியலில் எழுதுங்கள். ஆரம்பத்தில் இதில் எழுத அதிகம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்தப் பட்டியல் போல் நீளமான ஒரு பட்டியலை நீங்கள் தயார் செய்யவே முடியாது. பட்டியலில் எழுதத் தேவையானவற்றைப் பெற நீங்கள் சில இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் சென்று ஒரு முழு உலா வர வேண்டும். அடுத்து ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். இந்த இரு இடங்களிலும் நோயாளிகளையும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்னென்ன என்று உங்களுக்குப் புரியும்.

மேலே சொன்ன கதையில் கூட அந்த மனிதன் தன்னை விட ஒரு கார் அதிகம் உள்ள பக்கத்து வீட்டுக்காரனை மேலோட்டமாகப் பார்க்காமல் உற்று கவனித்தால் அவனிடம் உள்ள எத்தனையோ குறைபாடுகள், பிரச்சினைகள் தன்னிடம் இல்லை என்பதை உணர முடியும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து உழலும் போது மலையாய் தெரியும் கவலைகள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து கவனிக்கும் போது சிறுத்துப் போகின்றன.

யாருக்கும், என்றைக்கும், உள்ள பிரச்சினைகளை விட இல்லாத பிரச்சினைகளே அதிகம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு கவலைப்படும் நீங்கள் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகளின் பட்டியலையும் எடுத்துப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன், எல்லோருடைய எல்லா பிரச்சினைகளயும் பார்க்கும் போது, அவர்களுடைய துக்கங்களை நேரடியாகக் காணும் போது, உங்கள் கவலைகளில் பல அவற்றின் முன் அர்த்தமில்லாமல் போவதைக் காண்பீர்கள்.

துரியோதனனைப் போல் கவலைப்பட நூறு காரணங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விட ஆயிரம் காரணங்கள் உள்ளன என்பதை இந்த இரண்டு பட்டியல்களும் உங்கள் தலையைக் குட்டிச் சொல்லும்.

தேங்க்ஸ் டு -என்.கணேசன்

Wednesday, April 15, 2009

இந்தியா- உலக நாடுகளின் குப்பை தொட்டியா?

தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஐ.டி .சி. நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நகராட்சிக் கழிவுகளைத் தவறான தகவல் அளித்து இறக்குமதி செய்ய முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நமது துறைமுகப் பொறுப்புக் கழகங்களும், சுங்க இலாகா அதிகாரிகளும், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையும் கவனமாகவும் முனைப்பாகவும் செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம். அவர்களது பார்வையில்படாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கழிவுப் பொருள்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இரண்டு மாதங்களுக்கு முன்புகூட, சென்னைத் துறைமுகத்தில் பழைய பேப்பர் என்று தவறான தகவல் அளித்து சுமார் 150 டன்கள் ஆறு கன்டெய்னர்களில் வந்து இறங்கின. துறைமுக அதிகாரிகளுக்கும், சுங்க இலாகாவினருக்கும் சந்தேகம் ஏற்பட்டதால், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையினரின் உதவியை நாட, அந்த 150 டன்களில் சுமார் 40 சதவீதம் எலக்ட்ரானிக் கழிவுகளும், நகராட்சிக் குப்பைகளும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் திருப்பி அனுப்பப் பரிந்துரை செய்யப்பட்டு, இப்போதும் துறைமுகத்தில் அவை நாற்றமடித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற கழிவுகள், பழைய காகிதம் என்கிற பெயரில்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமான காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. அவை சுமார் 20 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்கின்றன. அதில் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பழைய காகிதத்தில் இருந்துதான் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதையே சாக்காக வைத்து பழைய காகிதத்துடன் நகராட்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளையும் ஏற்றுமதி செய்துவிடுகின்றன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். இப்படிக் குப்பையுடன் இறக்குமதி செய்யும்போது குறைந்த விலைக்குப் பழைய காகிதம் கிடைக்கிறது. இதில் இடைத்தரகர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொழிக்கிறார்கள். இதுபோன்ற குப்பைகளை இறக்குமதி செய்பவர்கள், கண்டுபிடிக்கப்பட்டால் மாயமாக மறைந்து விடுவார்கள். இல்லையென்றால் நீதிமன்றத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு காலம் தாழ்த்தும் உத்தியில் ஈடுபடுவார்கள். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் துறைமுக அதிகாரிகளுக்கோ, சுங்க இலாகாவினருக்கோ, மாசுக் கட்டுப்பாட்டுத் துறைக்கோ முறையாக வரையறுக்கப்படாமல் இருப்பதுதான் காரணம்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் சோதனை இடும் வசதி நமது துறைமுகங்களில் இல்லை. சென்னை போன்ற பெரிய துறைமுகங்களில்கூட, கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் வசதி ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது. கப்பல் மூலம் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகள் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை கடத்தப்படுவதுகூட சாத்தியம்தான். இறக்குமதியாளர்கள் தரும் தகவல் மற்றும் உத்தேசமான பரிசோதனை மூலம் மட்டும்தான் சுங்க இலாகாவினர் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

பயங்கரவாதிகளால் நமது நாடு பலமுறை தாக்கப்பட்ட பிறகும் நமது துறைமுகங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு நமது அரசிடம் ஏற்படாதது வியப்பாக இருக்கிறது. துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை "ஸ்கேன்' செய்யும் வசதிகள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக்கூட ஏன் அரசு உணரவில்லை என்பது தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க, வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து நகராட்சிக் குப்பைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பது அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இப்படிக் குப்பைகளை இறக்குமதி செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தண்டனை அளிக்கும் விதத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதிலும் மத்திய அரசு தயங்குகிறது. "காட்' ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை என்றெல்லாம் கூறும் நமது ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதுபோல இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது குப்பைத் தொட்டிகளாக உபயோகித்துக் கொள்ள மறைமுகமாக அனுமதிக்கிறார்களோ என்கிற சந்தேகம் கூட எழுகிறது. கேட்டால், இதைப் பற்றி நாம் அதிகம் பேசினால், அன்னிய முதலீடு குறைந்துவிடும் என்று பதிலளிக்கிறார்கள்.

இந்தியாவை உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாக்கி விட்டு அன்னிய முதலீடு பெறுவது என்பது கண்களை விற்றுச் சித்திரம் பெறுவது போன்றதல்லவா? எலக்ட்ரானிக் கழிவுகள் மூலம் ஏற்படும் கதிர் வீச்சும், நகராட்சிக் குப்பைகள் மூலம் பரவக்கூடிய விஷக்கிருமிகளும் பல தலைமுறைகளைப் பாதிக்கக் கூடும் என்பது தெரிந்தும் அதைத் தடுக்க நாம் தவறுகிறோமே, இதைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் யாருமே இல்லையா?

Thursday, March 26, 2009

கல்வி கடன் - நடப்பது என்ன ?

Ye¡Ls YZeÏm Lp®d LPu, HrûU ¨ûX«p CÚdÏm Rϧ TûPjR, A§L U§lùTi ùTtßs[ UôQYoLÞdÏ UhÓúU YZeL úYiÓm Guß ùNuû] EVo ¿§Uu\m JÚ YZd¡u ¾ol©p LÚjÕj ùR¬®jÕs[Õ.

Ye¡Ls YZeÏm Lp®d LPû]l ùTßúYôo GjRûLV ©u]¦ûVd ùLôiP UôQYoLs GuTûR ùSÚdLUôLl Tôod¡\YoLÞdÏ UhÓúU, ¿§Uu\j§u LÚjÕ NodLûWVôn C²dÏm.

AW£Vp úUûPL°Ûm, AWÑ ®ZôdL°Ûm, "CjRû] B«Wm úTÚdÏ CjRû] úLô¥ Lp®d LPu YZeLlThÓs[Õ' Guß ×s°®YWeLs ùR¬®dLlThPôÛm, "¡ûPdL®pûX' Gu\ úYRû]d ÏWpRôu GlúTôÕm CÚkÕ ùLôiÓ YÚ¡\Õ.

CRtÏd LôWQm, YN§ TûPjRYoLÞm, LQdÏd LôhPlTPôR YûL«p TQm úNojRYoLÞm ReLs ©sû[LÞdLôL Ye¡d LPû] G°§p ùT\ Ø¥¡\Õ. CYoL[ôp Ye¡ úLhÏm ùNôjÕl Tj§Wm ApXÕ ûYl×j ùRôûLLÞdLô] WºÕLû[l ©ûQVôL ûYjÕ G°§p LPu ùT\ Ø¥¡\Õ. Ye¡LÞm £dLp CpXôR, CjRûLV "TôÕLôlTô]' Yô¥dûLVô[oLÞdÏ UhÓúU CuØLjÕPu Lp®d LPu YZeÏ¡\Õ. HûZd ÏÓmTjûRf úNokR UôQYoLÞdÏd Lp®d LPu UßdLlTÓ¡\Õ.

CkR ®`Vj§p ¿§Uu\m A°jÕs[ ¾ol× ªL Cu±VûUVôRRôL CÚd¡\Õ. "©[v-2 úRo®p 70 ®ÝdLôÓ U§lùTi ùTt\ UôQYo, AYWÕ Rôn RkûR CÚYÚûPV UôRf NmT[Øm ì. 30,000 BL CÚdÏmúTôÕ, R]dÏd Lp®d LPû] Ye¡ LhPôVUôLj RW úYiÓm Guß úLôW Ø¥VôÕ' Guß ¿§T§ ϱl©hÓs[ôo. úUÛm, "2001 HlWp 28-m úR§«hP ¬Noq Ye¡«u A±dûL«p, HûZVôn CÚd¡u\, A§L U§lùTi ùTt\ UôQYoLÞdÏd Lp®dLPu YZeL úYiÓm' Guß Ï±l©PlThÓs[Õ Gußm ¿§T§ ùR¬®jÕs[ôo.

¬Noq Ye¡«u A±ÜûWlT¥ Ck§V Ye¡Ls NeLm Ko BnÜd ÏÝûY, ùNuhWp Ye¡j RûXYo Bo.ú_. LôUj RûXûU«p AûUjRÕ. CkRd ÏÝ®u T¬kÕûWlT¥, "Rϧ TûPjR GkR Ko HûZ UôQYÚm Lp®d LhPQm ùNÛjR YN§«pûX GuTRôp EVo Lp®ûVj ùRôPÚm Yônl×j RûPTPdáPôÕ' Guß ¾oUô²dLlThÓs[Õ.

HûZLÞdÏd Lp®d LPu UßdLlTÓYÕm ©ûQ RWdá¥V YN§ TûPjRYoLÞdÏ, ©sû[L°u Ïû\kR U§lùTi Tt±d LYûX«u± Lp®d LPu YZeÏYÕúU EiûU ¨ûX. B]ôp CkR YZdÏ JÚ ®§®XdÏ. ùTôÕYôLl ùTtú\ôo CÚYÚm F¯VoLs Gu\ôp, LPu ùLôÓdL Ye¡Ls RVeLôÕ. B]ôp CkR YZd¡p, LPu YZeL UßjR ¨VôVjûR ¨ûX¨ßjR, ¬Noq Ye¡ Utßm Ck§V Ye¡Ls NeL Ø¥Ü GpXôYtû\Ùm, ""GeL AlTô ϧÚdÏs CpûX'' Guß Rôú] NUol©jÕ, EiûUûVj Rôú] ùY°lTP ûYjÕs[Õ Ye¡.

ì. 4 XhNm YûW GkR®RUô] ©ûQÙm úLôWôUp UôQYoLÞdÏd Lp®d LPu YZeL úYiÓm Guß NhPm CÚkRôÛm, ARuT¥ Ye¡Ls LPu YZeÏYÕ GuTÕ ªLªLd Ïû\Ü.

A§L U§lùTi ùTt\ HûZ UôQY¬u EVo Lp®dÏd LPu YZeL úYiÓm Guß ¬Noq Ye¡ Utßm BnÜd ÏÝ Y#ÙßjÕm ¨ûX«p, UôQYoL°u úRof£ ®¡RjûR ûYjÕ, HûZ UôQYoLÞdÏ Hu Øuà¬ûU RWdáPôÕ.

Cuû\V ãr¨ûX«p, HûZ GuTYo AWÑ F¯VúWô, R²Vôo ¨ßY]j§p UôRf NmT[jÕdÏl T¦VôtßTYúWô ApX. Lp®dLôLd LPu úLhÓ YÚm HûZ«Pm NmT[fNôuß, YÚYônf Nôuß GpXôØm ùTtß YÚmT¥ ®Wh¥V¥dÏm TûZV LhÓlùTh¥jR]jûR Cu]Øm Ye¡Ls ùRôPoYÕ Hu?

קV Ck§VôûY EÚYôdÏm GiQØm, C[mRûXØû\ ÁÕ Sm©dûLÙm, CkR SôhÓûPûUVôdLlThP Ye¡LÞdÏ CÚdÏúUVô]ôp, CYoLs HûZ UôQYoLs YÚmYûW Lôj§ÚdL úYi¥VúR CpûX. ©[v-2 úRoÜ Ø¥ÜLs ùY°Vô]Õm 90 ®ÝdLôÓ U§lùTi ùTt\ UôQYoL°u ®YWeLû[ Lp®j Õû\«p ùTtßd ùLôsYÕm, AYoRm ùTtú\ôo ùRô¯p ®YWeLû[ Ts°L°úXúV ùTßYÕm G°Õ. A§L U§lùTi ùTt\ HûZ UôQYoLû[ Ye¡Lú[ úR¥lúTôn, AYoL[Õ EVo Lp®dÏ ERY úYiÓm. Ye¡Ls ReLÞdLô] Ts°Lû[ RjùRÓdLÜm ùNnVXôm.

CjRû] úLô¥ ¨LW XôTm Guß LôhÓYûRd Lôh¥Ûm, CjRû] HûZ UôQYoLÞdÏd Lp®dLPu ùLôÓjúRôm GuTÕ úUXô] ùTÚûU ApXYô! CkRd LPûU Ye¡LÞdÏ EiÓRôú]!

Tuesday, March 17, 2009

வெளிச்சத்திற்கு வருமா சுவிஸ் பேங்கில் உள்ள இந்திய பணம் ?

Ñ®hNoXôkÕ AWÑ AiûU«p JÚ SpX Ø¥ûY A±®jRÕ. CÕ ¨fNVUôL AW£VpYô§LÞdÏ ùLhPúN§Rôu Gu\ôpáP, EXL UdLs VôYÚdÏm TVu A°dLdá¥V Ø¥Ü GuT§p Uôtßd LÚjÕ CÚdLØ¥VôÕ. ARôYÕ, Ñ®hNoXôkÕ Sôh¥u Ye¡L°p ùY°SôhPYo ùNnÕs[ úNªl× ®YWeLû[ ùY°lTÓjÕY§p JjÕûZlúTôm GuTÕRôu AkR SpX úN§.

CÕSôsYûW«Ûm, Ñ®hNoXôkÕ Ye¡L°p TQjûRf úNªdÏm ùY°SôhPYo ϱjR ®YWeLs, AkR Sôh¥u NhPlT¥ WL£VUôL ûYdLlTÓ¡u\]. EXL SôÓL°u Yt×ßjRp LôWQUôL RtúTôÕ ReL[Õ Sôh¥u WL£Vm LôdÏm UWûT R[oj§d ùLôs[ ØuYkÕs[Õ Ñ®hNoXôkÕ. RY\ô] Y¯«p ùTt\ TQmRôu úTôPlThÓs[Õ GuTRtLô] BRôWjûRd ùLôÓjRôp LQdÏ ®YWjûRj RW Jl×d ùLôiÓs[Õ.

AùU¬dLôûYf úNokR ùTÚm TQdLôWoLs 50 B«WjÕdÏm úUtThúPôo, Y¬ Hnl×dLôL Ñ®hNoXôkÕ SôhÓ Ye¡L°p TQjûRf úNªjÕ ûYjÕs[]o. EXL YojRL ûUVm RôdLlThP ©u]o AùU¬dLô ùSÚdL¥ ùLôÓjRRôp, AYoLs úLhP 300 úToL[Õ LQdÏ ®YWeLû[ UhÓúU Ñ®hNoXôkÕ AWÑ T¡okÕùLôiPÕ. Ut\YoL[Õ LQdûLj ùR¬®dL UßjÕ®hPÕ.

T¦Rp U\kR AùU¬dLôÜdúL Ñ®hNoXôkÕ T¦V Ußd¡\Õ Gu\ôp Ck§Vô Es°hP Y[Úm SôÓLû[f úNokR AW£VpYô§LÞdÏ CÕ ùNôodLéª ApXYô!

JqùYôÚ Sôh¥Ûm BÞm Lh£Ùm AûUfNoLÞm, A§Lô¬LÞm AVpSôÓLÞPu TpúYß YojRLj ùRôPo×Lû[j ¾oUô²lTYoL[ôL CÚd¡u\]o. BÙRm YôeÏRp, ¨XdL¬, LfNô GiùQn, NûUVp GiùQn C\dÏU§, Lôo EtTj§ Es°hP Tu]ôhÓ ¨ßY]eLÞdÏ Wj§]d LmT[m ®¬jRp ApXÕ ARtÏ G§ol×f ùNôpXôUp ùUü]m LôjRp, JÚ £X C\dÏU§dÏ ©WjúVL AàU§ A°jRp, JÚ £X ùTôÚsL°u HtßU§dÏ úYiÓùUuú\ ØhÓdLhûP úTôÓRp, úRNj§u Ød¡VUô] ©Wfû]«#ÚkÕ UdL°u LY]jûRj §ÚlTl úTôWôhPm SPjÕRp, Bh£ûVd L®rjRp G] GpXô ®`VjÕdÏm Lª`u, ûLëhÓ úLô¥d LQd¡p ¡ûPd¡\Õ.

ùSpÛdÏ Cû\jR ¿o YôndLôp Y¯úVô¥ ×pÛdÏm BeúL ùTô£ÙUôm GuTRôL, CjRûLV Øû\R®o EûPûUdÏ TôÕLôlTô] CPUôL Ñ®hNoXôkÕ CÚkÕ YÚ¡\Õ. Ñ®hNoXôkÕ Ye¡L°p ùY°SôhPYo úNojÕ ûYjÕs[ TQm 2 ¥¬p#Vu (JÚ XhNm úLô¥) PôXoLs!

CjRûLV Lª`u, ûLëhÓl TQm GpXôØm Ck§VôÜdÏ YWôUúXúV, úSW¥VôL AW£VpYô§Ls ùNôpÛm LQd¡p úTôPlTÓYÕm, úRoRp úSWj§Ûm, Bh£ûVd LôlTôt\ úYi¥V úSWj§Ûm CkRl TQm §¼ùW] ùYsû[l TQUôL YkÕ ER® ׬YÕm UdLÞdÏj ùR¬VôRÕ ApX.

RtúTôÕ Ñ®hNoXôkÕ AWÑ, ùY°SôhPYo ØRÄÓ LQdÏ ®YWeLû[l T¡okÕùLôsÞm A[ÜdÏ NhPjûRj R[oj§d ùLôs[ ØuYkÕs[ ¨ûX«p, Ck§VoLs AkSôhÓ Ye¡L°p ùNnÕs[ ØRÄhÓ ®YWeLû[ Ck§V AWÑ úLhÓl ùT\ Ø¥Ùm. B]ôp, BÞm Lh£, G§odLh£, Bh£dúL YW Ø¥VôR Lh£ G] Aû]YÚdÏm LQdÏ CÚdÏm Yônl×Ls A§Lm GuTRôp, Ck§V AWÑ CRtLô] ØVt£ûV úUtùLôsYÕ NkúRLmRôu.

Ck§VoL°u ØRÄÓ ùYßm Y¬ Hnl× ApXÕ Lª`u ûLëhÓ Gu¡\ Ls[lTQm UhÓmRôu Gu\ôp AR]ôp Ck§VôÜdÏl ùT¬V TôRLm CpûX. AÕ JÚ Øû\úLÓ GuTRôL UhÓúU CÚdÏm. B]ôp ®`Vm AlT¥VôL CpûX. Y¬Hnl× ùNnúYôo JÚ×\m CÚdL, ¾®WYôR AûUl×L°u TQØm úLô¥úLô¥Vôn Ñ®hNoXôkÕ Ye¡L°p Es[]. CYoLs ReLs TQjûR AúR Ye¡L°p LQdÏ ûYjÕs[, RôeLs ChP úYûXûVf ùNnÙm AûUl×Lú[ôÓ ùRôPo×ûPV SToL°u LQd¡p TQjûRl úTôÓ¡\ôoLs. AùU¬dLôÜdÏ, Y¬HnlTô[oLû[d Lôh¥Ûm, ¾®WYô§LÞdÏ CjRûLV Ye¡Ls êXUôL TQm YkÕ úNÚYÕRôu ùT¬V RûXY#VôL CÚkRÕ. NkúRLjÕdϬV AùU¬dLoL°u LQdÏ ®YWeLû[l ùT\ AùU¬dLô ùTÚm ùSÚdL¥ RWúYi¥«ÚkRÕ. RtúTôÕ ¾®WYôRm EXLm ØÝYûRÙm AfÑßjÕYRôp Aû]jÕ SôÓLÞúU Ñ®hNoXôkÕ AWÑdÏ ùSÚdL¥ RkRRu ®û[ÜRôu RtúTôûRV U]Uôt\m.

Ck§Vô ÁÕ ¾®WYô§Ls ϱVôL CÚd¡\ôoLs. ¾®WYôRjûR RÓjÕ ¨ßjRÜm, Ck§V SôhûPd LôdLÜm, Ñ®hNoXôkÕ Ye¡L°p Ck§VoL°u LQdÏl T¬YojRû] ®YWeLû[l ùTtß, AûRd LiLô¦lTÕ AY£Vm. ϱlTôL, ¾®WYôRjûR JÓdÏm T¦«p DÓThÓs[ úR£V TôÕLôl×l ©¬ÜPu CjRLYpLû[l T¡okÕùLôs[ úYiÓm. AW£Vp XôTjÕdLôL C§p Ck§V AWÑ ùUjR]m LôhÓúUVô]ôp, Ck§Vô®p ¾®WYôR AûUl×LÞdÏl TQm YkÕ ùLôiúP CÚdÏm. ÏiÓLs ùY¥jÕdùLôiúP CÚdÏm.

yogi ramsurat kumar


my guru-

my father-

yogi ram surat kumar