Friday, April 2, 2010

அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி

அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதாவை இந்தியா நிறைவேற்றியாக வேண்டும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, அணு உலை விபத்து காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த மாதம் இந்த மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய முயன்ற போது, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் குறிப்பிடுகையில், 'அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது, அணு உலை விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதாக இந்தியா எங்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை எந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசு தான். இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக இந்திய அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது' என்றார்.