Wednesday, January 27, 2010

பி.டி.கத்தரிக்காய்க்கு தடை:தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் பி.டி.கத்தரிக்காயை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்டு பயிரிடப்படும் பயிர்களினால் உடல் நலக்கோளாறு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும், வேளாண் நிலங்கள் பாதிக்கும் ஆபத்தினால் விவசாய நிலங்களும், விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட பி.டி.ரக கத்தரிக்காய் உற்பத்திக்கும்,விற்பனைக்கும் தடைவிதிக்கவேண்டும், பிற மரபணுமாற்றப்பட்ட பயிர்களை விவசாயம் செய்யவும் தடை விதிக்கவேண்டும் என்று விவசாயிகள்,வேளாண்மை அமைப்புகள்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், நடிகை ரோகினி உள்ளிட்ட அவ்வமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு அளித்தனர்.

மரபணு காய்களினால் ஏற்படும் ஆபத்து குறித்து விரிவாக எடுத்துரைந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … ''முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு பெண்கள் இணைப்புக் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றுதெரிவித்தார்.மேலும் எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரை இதை விற்கவோ பயிரிடவோஅனுமதிக்கக் கூடாது.'' என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment